ஆக்ஞை
1/02/2017
காணவே மயேஸ்வரத்தின் சுடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக்கேளு
தோணவே ஆக்கினையாம் விந்துவட்டம்
சொல்நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமதின் நிறந்தான் சொல்வேன்
புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே.
நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் னுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்து புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானேநின்று
குணமாக அங்றீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம்நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசைகேளே.
வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்துகண்டால்
தெரிசனமாய் நின்றுதொரு ஆறாதாரஞ்
சிவசிவா அரூபமய மாகத் தோணும்
கரிசினமாய் நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காணலாகும்
புரிசமுடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே.
- அகத்தியர்
கண்ணான சதாசிவத்தின் கருவைக்கேளு
தோணவே ஆக்கினையாம் விந்துவட்டம்
சொல்நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமதின் நிறந்தான் சொல்வேன்
புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே.
நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் னுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்து புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானேநின்று
குணமாக அங்றீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம்நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசைகேளே.
வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்துகண்டால்
தெரிசனமாய் நின்றுதொரு ஆறாதாரஞ்
சிவசிவா அரூபமய மாகத் தோணும்
கரிசினமாய் நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காணலாகும்
புரிசமுடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே.
- அகத்தியர்
Labels:Purpose, Esoteric, Science all, Chakra, kundalini, siddha, sitthar, yoga, ஆஞ்ஞை(Ajna), குண்டலினி, சித்தர், யோகம்


Post a Comment